Friday, January 29, 2010

சுனாமிக்குப் பிறகு வெளித்தெரியும் சிற்பங்களின் பொருள் என்ன?


சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வெளித்தெரியும் பல்லவர் காலச் சிற்பங்களின் பொருள் என்ன?
கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமிப் பேரழிவுக்குப் பிறகு தமிழகத்தின் பெயர்பெற்ற கடற்கரைக்கோயில் மற்றும் குடைவரைச் சிற்பங்கள் கொண்ட மாமல்லபுரத்தில், இவ்வளவு காலம் கடல்மணலுக்குள் மறைந்திருந்த இரண்டு பாறைச்சிற்பங்கள், முழுமையாக வெளித்தெரிகின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு பல்லவர் காலப் பாறைச் சிற்பங்களை அர்த்தப்படுத்தும் முயற்சியில் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தென்னகக் கண்காணிப்பாளர் கே டி நரசிம்மன் இறங்கி, அதில் வெற்றி கண்டிருப்பதாகக் கூறுகிறார்.

அவற்றில், சிறிய பாறையில் இருப்பவை, திருமாலின் அவதாரங்களாக அமைந்த சிற்பங்கள், மாமல்லன் என்று தமிழக வரலாற்றில் பெயர்பெற்ற முதலாம் நரசிம்மவர்மன் அமைத்தவை அவை என்கிறார் நரசிம்மன்.

அதே போல பெரிய பாறையில் இருப்பவை மாமல்லனின் பேரன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிவபெருமானுக்காக அமைத்த சிற்பங்கள் என்று ஆய்வாளர் நரசிம்மன் கூறுகிறார்

2 comments: