Tuesday, August 10, 2010

பூமியின் வடிவமும் வேகமும்

ஒரு கிரிக்கட் மைதானத்தை முழுதாக மேலிருந்து பார்க்க வேண்டும் என்றால் 50 அடி உயரத்திற்கு மேலே போனால் முழு மைதானத்தையும் பார்க்கலாம். இதைப் போன்றே பூமியை முழுவதுமாக பார்க்க வேண்டுமென்றால் எத்தனை கிலோ மீட்டர் உயரம் போக வேண்டும் தெரியுமா?

தினமும் நாம் பொதிகை சேனலில் வானிலை அறிக்கையில் பார்க்கும் இன்சாட் - 1பி செயற்கை கோளின் படம், 36 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து எடுக்கப்பட்டது. இதுவே பூமி முழு உருண்டையாக பந்து போல் தெரிவதற்கு பூமியில் இருந்து 72 ஆயிரம் கிலோமீட்டர் துரம் செல்ல வேண்டும். அந்த தூரத்தில் இருந்து பார்த்தால் பூமி ஒரு நீல நிற பந்து போல் மிதந்து கொண்டு இருக்கும்.

பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் குறுக்காக 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர். இதுவே பூமி மேலும், கீழுமாக ’போலார்’ சுற்றளவில் 12 ஆயிரத்து 714 கிலோமீட்டர் உள்ளது. பூமி சுற்றும் வேகம் 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர் ஆகும். ஒரு மணி நேரத்தில் 529 . 75 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றுகிறது. இது விமானத்தின் வேகத்தை விட கூடுதலாகும்.

பூமியின் இந்தவேகம் 11 மடங்கு அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் தரையில் ஒட்டிக்கொண்டிருக்கமாட்டோம். பூமியில் இருந்து தூக்கி எறியப்படுவோம். நல்ல வேலையாக பூமியில் அதுபோன்ற பாதிப்பு எதுவும் இப்போதைக்கு ஏற்படவாய்ப்பு இல்லை. ஒரு வினாடிக்கு 29.78 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 208 கிலோமீட்டர் வேகத்தில் தனது பாதையில் இரொந்து சற்றும் விலகாமல் ஒரே வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு தன்னைத்தானே சுற்றி வருகிறது.

by
அறிவுக்குச் சில தகவல்கள்

அமில மழை

காற்று மாசுபாட்டின் ஒரு விளைவுதான் ’அமில மழை’. எரிமழை சீறும்போதும், வானில் மின்னல் வெட்டும் போதும் ’சல்பர் டைஆக்சைடும்’, நைட்ரஜன் ஆக்சைடுகளும்,இயற்க்கையாக உருவாகின்றன. பெட்ரோல், டீசல் போன்ற வாகனங்கள், எந்திரங்களில் எரிக்கப்படும் போதும், கனரகத் தொழிற்சாலையிலிருந்தும் ‘ஆக்சைடுகள்’வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த ‘ஆக்சைடுகள்’ தண்ணீருடன், வளிமண்டலத்தில் உள்ள பிற வேதிப்பொருட்களுடன் வினைபுரிகின்றன. அப்பொது கந்தக அமிலம், நைட்ரிக அமிலம் மற்றும் பிற அமில படிவுகள் உருவாகின்றன. இந்த மாசுகள் காற்றினால் வெகு தூரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கடைசியில் அவை அமில மழையாகவும்,பனிமூட்டமாகவும்,புகையாகவும்,அமிலப் பொழிவாகவும் பூமிக்குத் திரும்பி வருகின்றன.
’பிஎச்’ அளவு கோளில் அமில மழை 0 முதல் 5 வரை அளவிடப்படுகிறது.அமில மழை பூமியின் மண்வளம் ,தண்ணீர்,வன உயிரினங்கள்,கட்டிடங்க்ள் மட்டுமின்றி மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.


by
அறிவுக்குச் சில தகவல்கள்

இந்திய சட்டம்

`இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).


by
அறிவுக்குச் சில தகவல்கள்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் செல்பேசிக் குப்பைகள்

புது டெல்லி: தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் உள்ள ஒரு புதிய செல்பேசியை வாங்கி பழைய செல்பேசியை தூக்கி எறிவது என்பது தற்போதைய நாகரீகத்தின் ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது. ஆனால் தூக்கி எறியப்பட்ட பயன்படாத செல்பேசிகள் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அடுத்த ஒரு பூதாகாரம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2012ஆம் ஆண்டு 8,000 டன்கள் செல்பேசிக் குப்பைகள் சேரும் என்று டெலாய்ட் என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் எச்சரித்துள்ளது.

தூக்கி எறியப்படும் செல்பேசிகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் ஒரு அசுர சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.



பழைய செல்பேசிகளை பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை அதிகரித்து புதிய செல்பேசிகள் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்படும் வேளையில் பழைய செல்பேசிகள் குப்பையாக மாறுகின்றன.

"முறையான மறு சுழற்சி, மறு பயன்பாடு திட்டங்கள் இல்லாததால் நச்சுத் தன்மையுடைய 8000 டன் செல்பேசி குப்பைகள் 2012ஆம் ஆண்டு ஆங்காங்கே கொட்டப்பட்டு சுற்றுச்சூழலை கடும் பாதிப்பிற்குள்ளாக்கும்". என்று டெலாய்ட் ஆலோசனை நிறுவனந்தின் மண்டல நிர்வாக இயக்குனர் பராக் சய்கோங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயனற்ற செல்பேசிகளை ஆங்காங்கே நாம் கொட்டும்போது அதிலிருந்து வெளிப்படும் நச்சு நிலத்தடி நீரினுள் ஊடுருவும் அபாயமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகிலேயே செல்பேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு வேகமாக முன்னேறி வரும் நிலையில் செல்பேசிக் குப்பைகளை சரிவர அகற்றுவது குறித்த மேலாண்மை அரசு தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இல்லையெனில் இது நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று அவர் அபாய மணி ஒலித்துள்ளார்.

ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய செல்பேசிகளை மாற்றுகின்றனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 மில்லியன் செல்பேசிகள் பயனற்ற குப்பைகளாய் மாறுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்

திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருபதாலும்தான் இமாலயத்திலிருந்து உறுபத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத ஜீவ நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.



தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர் குவின் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.



வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை வர்ணித்தார் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆனால் இந்த பனிமலை வெகு வேகமாக உருகி வருவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.

இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் 1,500 சதுர கி.மீ. இழந்து வரும் அமேசான் காடுகள்

பெரூவின் காடுகள் அழிப்புத் திட்டங்களாலும், சுற்றுச்சூழல் நாசத்தினாலும் ஆண்டொன்றுக்கு அமேசான் காடுகள் 1,500 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு மழைக்காடுகளை இழந்து வருகிறது.

அமேசான் மழைக்காடுகளில் 2,62,550 சதுர மைல்கள் பெரூ பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துறைமுக நகர் கல்லாவோவின் பரப்பளவைக் காட்டிலும் 10 மடங்கு மழைக்காடுகள் இழக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பேராபத்தை நோக்கி அமேசான் காடுகள் சென்று கொண்டிருப்பதாக சுற்றுசூழல் செயல் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

மழைக்காடுகளின் மண் நாசப்படுத்தப்படுவது அல்லது ரசாயனமயமாக்கப்படுவது வெப்ப வாயு வெளியேற்றத்தில் 42% பங்களிப்பு செய்து வருகிறது.

அமேசான் காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஆதிவாசிகளின் வாழ்க்கை பேராபத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பொதுச்சேவைகளும் இல்லாமல், அரசு உதவியும் இல்லாமல் மழைக்காடுகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மரம் வெட்டி பிழைப்பு நடத்தி வரும் ஆதிவாசிகள் அறிவர் மரம் வெட்டுவதும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதை.

உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளுக்கு தடை: உடன்படிக்கை அமல்

உலகளாவிய ரீதியில் கொத்துக் குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் புதிய சர்வதேச உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொத்துக்குண்டுகளை சேமித்துவைத்தல், அவற்றை பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் போன்றவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே உலகளவிலுள்ள கொத்துக்குண்டுகள் அழிக்கப்படவேண்டுமெனவும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே கொத்து குண்டுகளை தடைசெய்வதற்குரிய அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட 108 நாடுகள், கொத்து குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களிததிருந்த நிலையில் அதில் 38 நாடுகள் கொத்துக் குண்டுகளை அழிக்க உறுதிதெரிவித்திருந்தன.

கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருப்பதானது, மிகமுக்கியமான ஆயுதக் களைவு என்றும், கடந்த பத்தாண்டு காலத்தில் எட்டப்பட்டுள்ள மிக முக்கியமான மனிதாபிமான உடன்படிக்கை இது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிக்குப் புறம்பானதும், கொடூரமானதுமான ஆயுதம் ஒன்றிற்கு எதிராக மனிதநேயத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது என கொத்துக் குண்டுகள் கூட்டமைப்பின் இணைப்பாளர் தாமஸ் நாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை அமல்படுத்தல்பட்டிருப்பதானது உலகளாவிய ஆயுதக் களைவிலும் மனித நேய, நிகழ்ச்சிநிரலிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமென ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பற்ற நிலைமையை ஒழிப்பதற்கும், இக்கொத்துக் குண்டுகளால் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக பொதுமக்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கவும் உதவுமெனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த உடன்படிக்கையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Currency Rupee' Symbol



Finally Indian Currency, Rupee got a valid Symbol On July 15, 2010, and India state the power in Currency, joined elite to American Dollar ($), European Union - Euro (€), Japan Yen (¥), British Pound and with own symbol to make identity globally. Mr. D Uday Kumar had won the Indian Rupee Symbol Designing Contest in July 2010. The Symbol of Rupee consist of a blend of the Devanagri 'Ra' and Roman 'R'.

Rupee_Symbol_New

Rupee Symbol - Global Identity of Indian Currency


Before this, the situation was every time we had used INR, Rs. Rupiya prefix to show the amount in Rupee. New Rupee symbol have given new identity of Indian Rupee so that we will have a unique identity symbol like foreign currencies(American Dollar ($), Euro (€), Yen(¥)) in our daily transactions.

As Rupee symbol is designed by Mr. D Uday Kumar newly, the special key or feature is not available on present Keyboards. However, there are special softwares or fonts are designed by Software developers and rupee symbol can be typed using Keyboard_Button_Rupee_Symbol key on keyboard.

Step By Step Setting To Type Rupee Symbol


I have given step by step details on one can do setting in personal computers.

First of all, one should have Rupee_Foradian FONT file in computer.

Click To Download Rupee_Foradian and paste it in My Computer >> Control Panel >> Fonts Folder.

How To Type Rupee Symbol


Once you will have Rupee_Foradian in Control Panel >> Fonts, you can easily type Rupee symbol in Text Document, Word Document or any text files in your computer.

Now, open a new WordPad(.rtf) or Word Document(.doc) Or Text(.txt) File.
You can start typing in Arial font which is by default in WordPad.

Rupee_Symbol_New_Text

Now, to type Rupee symbol in those text, you have to select Rupee Foradian Font from the drop down list of fonts.

To type Rupee Symbol press Keyboard_Button_Rupee_Symbol key on your keyboard (nearest key of numeric 1) and the rupee symbol will be typed in your document, as given in below image.

How to Type Rupee Symbol

Indian Rupee Symbol' Keyboard Button


Obviously, Indian Rupee Symbol' Keyboard Button will be available on newly designed Keyboard in future, as The Government of India have processed and have proposed to the Unicode Consortium that the U+0971 (Unicode character code) can be assigned for the new Rupee symbol and in future, we could type Indian Rupee Symbol usingRupee Symbol Button on Keyboard.


Author: Mahesh