Tuesday, December 17, 2013

சிவ மந்திரம்!

 
 
 
ஓம் மணிமந்த்ர சரோ சரணம்!
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்!
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்!
ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்!
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்!
ஓம்  ஓம்  ஓம்

ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்ச்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;
ஓம்  ஓம்  ஓம்!

ஓம் நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்
ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்
ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்
துத்தம் துத்தம் துத்தம்!

= = = = = = =  oo o oo oo o ooo  oo  = = = = = = =

மனக் கொந்தளிப்பும் மனக் குழப்பமும் நீங்க!



ஆரூர் தில்லை அம்பலம் வல்லந் 
               நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி 
              கடல்சூழ் கழிப் பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூருங்
              குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும்
              பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே.
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு
             அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
              பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
              பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே.
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
              கடல் நீந்தலாங் காரணமே.
அட்டானம் என்றோதிய நாலிரண்டும் அழகன்
               உறைகா அனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றும்
                 களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலை மங்கை பங்கன் 
                 மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்
                 அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப்
                 பூசி ஆறணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
                 திருநனி பள்ளி சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்
                 விரும்பும் மிடைப் பள்ளி வண்சக்கர மால்
உறைப்பாலடிபோற்றக் கொடுத்த பள்ளி
                 உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே.
மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும் மதிகூர்
           திருக்கூடலில் ஆலவாயும்ஆறை வடமாகறல்
 அம்பர் ஐயாறு அணியார் பெருவேளூர் விளமர் 
                 தெங்கூர் சேறை துலை புகலூர் 
அகலாதிவை காதலித்தான் அவன்சேர் பதியே
·· ··
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்
                 இரும்பைப் பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால் விடையான் விரும்புங்
                 கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்சம் என்றே நினைமின்
                 தவமாம் மலமாயின தான் அறுமே.
மாட்டூர் மடப்பாச்சிலாச் சிராமம் முண்டீச்சரம்
                 வாதவூர் வாரணாசி காட்டூர் கடம்பூர் 
படம்பக்கங் கொட்டுங் கடல் ஒற்றியூர் மற்று
                 உறையூர் அவையும் கோட்டூர் திருவாமாததூர் 
கோழம்பமுங் கொடுங்கோவலூர் திருக்குணவாயில்
··
·· குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்புறம்பயம் 
 பூவணம் பூழியூரும் காற்றூர் வரையன் றெடுத்தான் 

முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்று நீ கருதே.
 
 
நெற்குன்றம் ஓததூர் நிறைநீர் மருகல் 

நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சரம் நளிர்சோலையுஞ் 
சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேத்தி மழைதடுத்த
 கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கென்றுந் தொலைவிலாதான் உறையும்
 குடுமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி
 தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்புஞ் 
சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிமலன் உமையோடுங்கூட நெடுங்காலம்
 உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர் புறங்கூறிய புன்சமணர் நெடும்பொய்களை
 விட்டு நினைந்துய்ம்மினே.
அம்மானை அருந்தவமாகி நின்ற அமரர்
 பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மா மலர்ச் சோலை குலாவு கொச்சைக்
 கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும்
 பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
 

இங்கும் காணலாமே கயிலாத நாதனை!



சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.

இடைமருது ஈங்கோ இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்கரூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.

எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையாய் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுரை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுரை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சரஞ் சேய்ஞலுõர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் விரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் உற்றததூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் 

தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்