Thursday, January 21, 2010

தாமிரபரணி கரையோரம் 39 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும்

தமிழர்களின் தொன்மையை வெளிஉலகுக்கு எடுத்துக்கூற ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி கரையோரம் ​ உள்ள 38 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என ​ பெரியார் ஈ.வெ.​ ராமசாமி-நாகம்மை கல்வி,​​ ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வே.​ ஆனைமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
​ பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு ​ மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ள ""தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்:​ ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டமும்'' என்ற தேசியக் கருத்தரங்க நிகழ்வுகள் குறித்து நிருபர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
​ தமிழர்களின் ஆதி எச்ச நல்லூர்தான் ஆதிச்சநல்லூர்.​ சுமார் பத்தாயிரம் ஆண்டு வரலாற்றைப் பொதிந்து வைத்திருக்கிறது இந்த ஊர்.​ சங்க இலக்கியப் புரவலர் நல்லூர் நத்தத்தனார் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான்.
​ பொருநை நாகரிகம் என்று அழைக்கப்படும் பாண்டி நாட்டு நாகரிகம் பழம்பெரும் நாகரிகம் என்பதை பறைசாற்றும் ​ ஆதிச்சநல்லூர் 1876 இலேயே அடையாளப்படுத்தப்பட்டது.​ முனைவர் ஜாகோர் என்னும் ஜெர்மனியரால் அப்போது அகழாய்வு செய்யப்பட்டது.​ சிந்துவெளியில் மொகஞ்சதரோ,​​ ஹரப்பா முதலிய இடங்களில் நடந்த அகழாய்வுக்கு முன்பே இங்கே அகழாய்வு செய்யப்பட்டிருந்தும் மத்திய அரசு இதில் உண்மையான அக்கறை கொள்ளவில்லை.​ போதிய அளவு விளம்பரமும் இóல்லை.​ இதனால் இவ்வூரின் சிறப்பு வெளியுலகுக்கு தெரியாமல் போய்விட்டது.​ ஜாகோர் ஆய்வில் கண்டறியப்பட்ட தடயங்களை அவர் ஜெர்மன் நாட்டுக்கு எடுத்துச் சென்று ​ விட்டார்.​ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லெபிக் கண்டெடுத்த தடையங்கள் பாரிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன.
​ பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் தென்மண்டல தொல்லியல் ​ கண்காணிப்பாளராக இருந்த அலெக்ஸôண்டர் ரியா 1899 முதல் ​ 1905 வரை அகழாய்வு நடத்திக் கண்டெடுத்த பொருள்கள் ​ சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.​ தங்கம்,​​ இரும்பு,​​ வெண்கலம் முதலிய உலோகக் கருவிகளும்,​​ பாண்டங்கள்,​​ அணிகலன்கள்,​​ தாழிகள் ​ முதலியவையும் இதில் அடங்கும்.
​ அதன் பின்பு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இந்திய ​ தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் தியாக.​ சத்தியமூர்த்தி ​ தலைமையில் கடந்த 2003-05ல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.​ அப்போது,​​ மிகப் பழமையான புதிய தடயங்கள் ​ கிடைத்தன.​ அதில்,​​ உலகில் வேறெங்கும் கிடைக்காத மூன்று ​ அடுக்குகளாய் அமைந்த முதுமக்கள் தாழிகள் குறிப்பிடத்தக்கவை.
​ சிந்துவெளியில் கிடைத்தது போன்ற ஒட்டு மாலை இங்கு ​ மட்டுமே கிடைத்தது.​ இதிலிருந்து இந்த நாகரிகம்,​​ சிந்துவெளி ​ நாகரிகத்திற்கு முந்தைய தனித்த நாகரிகம் ஆகும்.​ இந்த ​ சிறப்பை தமிழர்களும்,​​ உலக மக்களும் அறியாமல் உள்ளனர்.​ இவற்றை உலகம் அறியச் செய்யவே இங்கே இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment