Friday, May 21, 2010

10-ம் வகுப்பு, மெட்ரிக் தேர்வு முடிவுகள் மே 24 அல்லது 26ம் தேதி வெளியாகும்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24 அல்லது மே 26ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வை 8.56 லட்சம் பேரும்,​​ தனித் தேர்வர்களாக 99,000 பேரும் எழுதினர்.​ ஏப்ரல் 9ம்ம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து,​ தற்போது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ​​ எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை அல்லது புதன்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக அரசுத் ​தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment